
நான் சென்ற வாரம் திருச்செந்தூர் சென்றிருந்தேன். அப்பொழுது எனது உறவினர்கள் கோயிலுக்குள் சாமி கும்பிட சென்று விட்டார்கள். நான் அவர்களின் செருப்புகளுக்கு காவல் காத்து வெளியே கடற்கரை ஓரம் உள்ள பழைய தேவர் மண்டபம் (தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது) அருகில் அமர்ந்து இருந்தேன்.
அப்போது அதன் அருகே இருக்கும் மண்டபத்து சிற்பங்களை பார்தது கொண்டே வரும் பொழுது, ஒரு அரிய சிற்பம் ஒன்று கண்ணில் பட்டது. அந்த காலத்தில் அடுத்த மதத்தவர்களை கழுவேற்றம் செய்த காட்சி உணர்ச்சி பூர்வமாக சிற்பி செதுக்கி உள்ளார் . அதனை நிழற்படம் எடுத்து உள்ளேன். தங்களது பார்வைக்காக அனுப்பி உள்ளேன்.
5 கருத்துகள்:
கழுவேற்றம் - ம்ம்ம்ம் - அக்காலத்தில் இயல்பான தண்டனையாக இருந்தது - ஆனால் இத்தண்டனை அடுத்த மதத்தவர்களுக்கு மத வெறியின் காரணமாக விதிக்கப்பட்டதா = தெரியவில்லை
எனினும் சிற்பம் அருமை
மிக மிக நன்று
சிற்பம் மிக அருமை.
சிற்பம் மிக அருமை.
இது முழுக்க முழுக்க உன்மை இனி மேல் இந்த கோவிலுக்குள் நுழைபவர்கள் சமணவழிபாடு செய்தல் கூடாது அப்படி செய்தால் இந்த தண்டனை என அச்சுறுத்துவதற்காக இந்த சிலை அங்கு நிறுவப்பட்டது, திருப்பரங்குன்றம சமணர்கள் வாழ்ந்த குகைக்கோவில் பின்னால் வந்த மதங்கள் அங்கு தமிழகத்தில் புகழ்பெற்று விளங்கிய துறவியான முருகனின் கதையை திருப்பரங்குன்றத்தில் ஓடவிட்டது, (திரு பரங் குன்றம் திரி பெருங் குன்றத்தின் மறுபு திரி என்பது பௌத்த சமய நூல்களை குறிப்பிடுவது, அதாவது சமயனூல்கள் ஓசைவரும் பெருங் குன்றுகள் என்று பொருள்
கருத்துரையிடுக